தாராபுரத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய கோரி கோட்டாட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தொற்று இருக்கும் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென கோட்டாட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்கவும், கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக கோழிகளிலிருந்து பரவக்கூடிய பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோழி இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குண்டடம், மூலனூர், அலங்கியம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகளில் இருந்து அதிக அளவில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும், கோழி இறைச்சிகளை மக்கள் சாப்பிடும் போது பொதுமக்களுக்கு அதிக அளவு பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே உடனடியாக தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தொற்று இருக்கும் கோழிப்பண்ணைகளில் கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மேலும் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மேற்கு மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன், தாராபுரம் நகர செயலாளர் தொண்டபாணி, தன்ராஜ், பகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...