கோவை ராமநாதபுரத்தில் இன்ஜினியரின் வீட்டில் 41 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று சோதனை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


Coimbatore: கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சிவராம் நகரை சேர்ந்தவர் மன்மதன்(55). திருச்சியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52). இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனுராதா திருச்சி சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக டார்ஜிலிங் சென்றனர். 

இதனையடுத்து, நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த வீட்டு வேலைக்கார பெண் சுசீலா என்பவர் செல்போனில் அனுராதாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதனையடுத்து அனுராதா கோவையில் உள்ள தனது சகோதரரை வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கூறினார். மேலும் நேற்று (ஏப்ரல்.27) அனுராதா கோவை திரும்பினார். 



வீட்டுக்கு சென்று பார்த்த போது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 41 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அனுராதா ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...