வால்பாறை சாலையில் சுற்றுலா வேன் பாறையில் மோதி 31 பேர் படுகாயமடைந்தனர். கொண்டை ஊசி வளைவு அருகே நிகழ்வு நடந்தது, படுகாயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: திருவாரூர் மாவட்டம் பகுதியிலிருந்து 5 நாள் சுற்றுலா பயணமாக வந்த 31 நபர்கள் கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்துவிட்டு பொள்ளாச்சிக்கு திரும்புவதற்காக புறப்பட்டனர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சுற்றுலா வாகனம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் கவி அருவி அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த வாகனத்தில் வந்த குழந்தைகள் உட்பட 31 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.