கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். செல்போன் பறிப்பு, தகராறு உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். CCTV காட்சிகள் மற்றும் கைரேகைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (56). இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (50) தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். அவர்களுக்கு மணிகண்டன் (30) மற்றும் பரமேஸ்வரன் (27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து சுந்தராபுரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். பரமேஸ்வரன் தாயாருடன் இருந்து வருகிறார்.


ரங்கநாதனுக்கு மது பழக்கம் இருந்ததால் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரை பிரிந்து சாலையோரமாக வசித்து வந்தார். தினமும் தண்ணீர் பந்தல் அடுத்த Telecom 3வது வீதி பகுதியில் படுத்து தூங்குவது இவரது வழக்கம். அதேபோல் மார்ச் 21 இரவு அந்த பகுதியில் படுத்து தூங்கினார்.


மார்ச் 22 காலை அந்த வழியாக சென்றவர்கள் ரங்கநாதன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது, இறந்தவரின் அருகில் ரத்தக் கரையுடன் கல் கிடந்ததைக் கண்டனர். மர்ம நபர் ஒருவர் கல்லை ரங்கநாதன் தலையில் போட்டு கொலை செய்திருந்தது தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் ரங்கநாதன் உடலை மீட்டு ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரங்கநாதனிடம் ஏற்கனவே மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரது புதிய செல்போனை பறிக்க முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.


இதனால் மீண்டும் செல்போன் பறிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட யாராவது கல்லை போட்டு கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் உடலின் அருகே இருந்த கல்லில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றியும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் ரங்கநாதனை கொலை செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...