மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜடையம்பாளையம் ஊராட்சி மக்கள்

சீரான குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, காரமடை, ஜடையம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆலங்கொம்பு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று (ஏப்ரல்.29) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சுமூக முடிவு எட்டியதையடுத்து கலைந்து சென்றனர்.



இந்த நிலையில் நேற்று போலீசார், வருவாய்த்துறையினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலனளிக்காததால் இன்று (ஏப்ரல்.30) காலை இரண்டாவது நாளாக அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...