துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

மே தின விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பங்கேற்று தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது மே தினம் வாழ்க, தொழிலாளர் தினம் வாழ்க என நிர்வாகிகள் கோசங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு அண்ணா தொழிற்சங்க துடியலூர் பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். 1வது வட்ட கழக செயலாளர் சாந்திபூஷன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொழிற்சங்க கொடி ஏற்றினர்.

அப்போது மே தினம் வாழ்க, தொழிலாளர் தினம் வாழ்க என கோசங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தொழிற்சங்க தலைவர் கண்ணதாசன், அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், பகுதி துணை செயலாளர் சரவண பாண்டியன், துடியலூர் தொழிற் நுட்ப பிரிவு செயலாளர் கெளதம், 14வது வட்ட கழக செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், 2ஏ வட்ட கழக செயலாலர் காளிச்சாமி, 15ஏ வட்ட கழக செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், 1வது வட்ட பொருளாளர் ராஜகோபால், 1வது வட்ட கழக வர்த்தக அணி செயலாளர் முத்து, முன்னாள் கிளை செயலாளர் சரவணன், 1வது வட்ட கழக துணை செயலாளர் சுசிலா, முன்னாள் துணை செயலாளர் ராஜாத்தி, 14வது வார்டு நடராஜன், கழக உறுப்பினர் விஜயா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



அதனையடுத்து தேசிய பட்டியல் இன மக்கள் இயக்கம் சார்பாக மே தின விழா துடியலூரில் கொண்டாடப்பட்டது. இதில் அம்பேத்கர் படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மலர்கள் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகங்கள், மாற்றுத்திறனாளி மக்களுக்கு அரிசி பைகள், பெண்களுக்கு சேலைகள், ஆண்களுக்கு சர்ட்டுகள் வழங்கினார். இந்த விழாவில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தேசிய பட்டியல் இன மக்கள் இயக்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...