குற்றப்பிரிவு ஆய்வாளர் மீனா குமாரியின் செயல்களை வெளிப்படுத்திய ஜூனியர் ரிப்போர்ட்டர் மீது தொடரும் பாதுகாப்பு பிரச்சனை

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் மீனா குமாரி என்ற முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது குற்றங்களை வெளிப்படுத்திய குருஸ் முத்து பிரிண்ஸ் அண்மையில் பல அசவுரியங்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டார். மே 2ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.


கோவை: கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணி புரிந்த மீனா குமாரி மீது பல திடுக்கிட வைக்கும் உண்மை குற்றங்களை ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் குருஸ் முத்து பிரிண்ஸ், மாதம் இருமுறை இதழில் அண்மையில் வெளியிட்டிருந்தார்.


அதன் பிறகு மீனா குமாரி ஆய்வாளரால் பல அசவுரியங்களும், மிரட்டல்களும் பல விதங்களில் வருவதால் குருஸ் முத்து பிரிண்ஸ் தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறை தலைவரிடம் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.


அந்த புகார் தொடர்பான விசாரணை இன்று (மே.2) கோவை ரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் மேற்பார்வைக்கு வந்திருந்தது.


பின்னர் விசாரணைக்கு புகார் தாரரான ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது எதிர் மனுதாரரும் காவல்துறை ஆய்வாளருமான மீனா குமாரி ஆஜராகாமல் தட்டிக் கழித்து இருந்தார்.


இந்த விசாரணைக்கு பின் பிரின்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் காவல்துறையினர் திட்டமிட்டு எனது புகார் மனுவை தட்டி கழித்து ஆய்வாளர் மீனா குமாரியை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு ஆய்வாளர் மீது கொடுத்த புகாரினை மற்றொரு ஆய்வாளர் விசாரிக்க பணித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...