கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் தொடக்கம்

கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 பேர் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.



இதில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.



மேற்படி பயிற்சியானது இன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்கள் நடைபெறவுள்ளது.



மேற்படி 2 கி.மீ ஓட்டமானது கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவுடைந்தது.

கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு மற்றும் இருபால காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...