கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் தொடக்கம்

கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 பேர் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.



இதில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.



மேற்படி பயிற்சியானது இன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்கள் நடைபெறவுள்ளது.



மேற்படி 2 கி.மீ ஓட்டமானது கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவுடைந்தது.

கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு மற்றும் இருபால காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...