தாராபுரத்தில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உட்பட இருவர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும், முகமது ரஃபீக் என்ற நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தாராபுரம் நகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சவுதா கனி வயது 35, இவரது கணவர் சையது இப்ராகிம். மேலும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் வயது 47 என்ற நபரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரையும் தாராபுரம் காவல் உதவியாளர் சிவராஜ் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும் முகமது ரஃபீக் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...