சிங்காநல்லூர் அருகே செல்போன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து – போலீசார் விசாரணை

கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த செல்போன் கடை உரிமையாளரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் நேற்று (மே.2) கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்காநல்லூர் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 2 பேர் தினேசை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் கத்தியால் தினேசை குத்தினார். இதை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர்.

இதைப்பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த தினேஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...