கோவை ஆர்.எஸ்.புரம் அருகே செல்போன் டவரில் இருந்து விழுந்து ஊழியர் பலி - ஒப்பந்ததாரர் மீது வழக்கு

ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த ஊழியர், திடீரென நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கோவையில் தங்கியிருந்து செல்போன் டவர் பராமரிப்பு பணி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (மே.2) கார்த்திக் ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.



இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்போன் டவர் ஒப்பந்ததாரர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த வேலுசாமி (60) என்பவர் மீது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியரை பணிக்கு அமர்த்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...