சவுக்கு சங்கர் கைது: கோவைக்கு அழைத்து வரும் வழியில் காவல்துறை வாகனம் விபத்து.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரும் வழியில்,  தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம், காவல்துறை மோதியதில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.


கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட நிலையில்,கைதுக்கு பிறகான ஒரு பரபரப்பான நிகழ்வில், சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 







இன்று நள்ளிரவு 3 மணி அளவில் தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தேனியில் இருந்து

கோவையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அவரை காவல்துறை வாகனம்.மூலம் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...