கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.
கோவை: கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் இந்திய சிலம்பம் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டி நிகழ்வுகளில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, சித்திரை சிலம்பம், வாள் வீச்சு மற்றும் சிலம்பு சண்டை போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

வீரர்களும் வீராங்கனைகளும் அவரவர் கலைக்கு ஏற்றவாறு சிலம்பத்தை சுழல திறமையை நிரூபித்தனர்.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு தெற்காசியா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைத்தன.
போட்டி நிகழ்வுகளில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, சித்திரை சிலம்பம், வாள் வீச்சு மற்றும் சிலம்பு சண்டை போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
வீரர்களும் வீராங்கனைகளும் அவரவர் கலைக்கு ஏற்றவாறு சிலம்பத்தை சுழல திறமையை நிரூபித்தனர்.
வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு தெற்காசியா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைத்தன.