யூடியூபர் சவுக்கு சங்கரை மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு

கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் நீதிபதி செங்கமலச்செல்வத்திடம் தெரிவித்தார்.


கோவை: காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக சவுக்கு சங்கர் இன்று (மே.8) ஆஜர்படுத்தப்பட்டார்.



நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

மேலும், மதுரை அல்லது தஞ்சை சிறைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி,வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என கூறினார்.

பின்னர் இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே.22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...