கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வாழை மரங்களை காப்பாற்றிவந்தநிலையில், நேற்றிரவு காற்றுடன் பெய்த மழையில், ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது.

கடந்த ஆறு மாத காலமாக கடும் வரட்சி நிலவி வந்த சூழலில், பல லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விலைக்கு வங்கி பயிரிட்ட வாழை மரங்களை காப்பாற்றிய விவசாயிகள், நேற்று நள்ளிரவு வீசிய சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் 75லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது.
கடந்த ஆறு மாத காலமாக கடும் வரட்சி நிலவி வந்த சூழலில், பல லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விலைக்கு வங்கி பயிரிட்ட வாழை மரங்களை காப்பாற்றிய விவசாயிகள், நேற்று நள்ளிரவு வீசிய சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் 75லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.