பத்தாம் வகுப்பு தேர்வில் உடுமலை மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் - பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு

ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி மாணவி யுகாஷினி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பயிலும் யுகாஷினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.



இந்த நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவி யுகாசினிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பின்னர் பள்ளியின், தாளாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே. ராமசாமி மாணவிக்கு இனிப்புகள் வழங்கி,



இதே போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். என் வெற்றிக்கு காரணம் தாய் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிப்பு தான். பள்ளியில் அதிகமான மாதிரி தேர்வுகள் வைத்து ஆசிரியர்கள் என்னை உற்சாகம் ஊட்டினர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பள்ளியின் தாளாளர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, தற்பொழுது மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற யுகாஷனி ஆர்.கே.ஆர். குரு வித்யா பள்ளியில் எல்.கே.ஜி முதல் படித்து வருகிறார். தற்சமயம் அயராது படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இந்த வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் செயலர் கார்த்திக் குமார், முதல்வர்கள் மாலா மற்றும் மஞ்சுளா தேவி, செல்வகுமார், பெற்றோர், ஆசிரியர், கழக நிர்வாகிகள் மற்றும் உடுமலை நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவி நேற்று வெளியூரில் இருந்த காரணத்தால் இன்று பள்ளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...