கோவை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி வரை இடியுடன் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழையும், 16 மற்றும் 17ம் தேதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டியெடுத்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும், மழை அளவு எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் தற்போது மே.11 கூறியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல சென்னையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 29 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 13,14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...