விசாரணையின் போது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் சவுக்கு சங்கரை சந்திக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்று வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Coimbatore: சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செய்தியாளர்களை இன்று மே.13 சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை நடைபெறும் விசாரணையின் ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சவுக்கு சங்கரை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பதையும், சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம்.
மேலும் குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம், அதற்கு கால அவகாசம் உள்ளது என்றார்.
அப்போது பேசிய அவர், சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை நடைபெறும் விசாரணையின் ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சவுக்கு சங்கரை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பதையும், சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம்.
மேலும் குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம், அதற்கு கால அவகாசம் உள்ளது என்றார்.