உடுமலையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் 250 கிலோ பறிமுதல்

உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் நடத்திய ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்திரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படியும் உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் உடுமலை நகரப் பகுதியில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது மாம்பழம் மொத்தமாக மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகளில் மாம்பழங்கள் செயற்கையாக ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ எடையுள்ள அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.



கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்ணும் பழமாக மாம்பழம் இருப்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.



மேலும் ரசாயன முறையில் செயற்கையாக மாம்பழங்களை பழக்க வைத்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...