மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதாக மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு, இன்று (மே.16) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.



பின்னர் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் E.உமர், மாநில பிரதிநிதிகள் A.சாதிக் அலி, A.K.சுல்தான் அமீர், கோவை மத்திய மாவட்ட தலைவர் A.சர்புதீன், மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் K.U.முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், தமுமுக துணை செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரகுமான், மமக துணை செயலாளர்கள் S.S.அபு, ஆஷிக் அகமது, மருத்துவர் அணி செயலாளர் சபீர் அலி, பொருளாளர் ஜியாஉல்ஹக், மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. தொண்டர்களுக்கும், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...