மங்களூரு முதல் கோவை வரையிலான சிறப்பு ரயில் சேவையின் புறப்படும் மற்றும் வந்தடையும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மங்களூரில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்குப் புறப்படும் மங்களூரு - கோவை சிறப்பு ரயில் (எண்: 06041) அன்று மாலை 6.15 மணிக்கு கோவையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூரை சென்றடையும் நேரமானது, மாலை 5 மணியில் இருந்து 4.50 ஆகவும், கோவை நிலையத்தை சென்றடையும் நேரமானது மாலை 6.15 மணியில் இருந்து மாலை 5.25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூரை சென்றடையும் நேரமானது, மாலை 5 மணியில் இருந்து 4.50 ஆகவும், கோவை நிலையத்தை சென்றடையும் நேரமானது மாலை 6.15 மணியில் இருந்து மாலை 5.25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.