உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆன குறுமலை, குளிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இரவு எழு மணி அளவில் காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை சூழ்ந்தது. கோவில் பகுதியில் உண்டியல்கள் பாலத்தின் கவர்கள் போட்டு மூடப்பட்டன; மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.