பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள ஜெய் கணபதி நகர், கிருஷ்ணவேணி ராஜநகர் மற்றும் வாசவி நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது.



நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்துவிட்டது. கிருஷ்ணவேணி ராஜநகர், ஜெய் கணபதி நகர், வாசவி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.



இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.



மேலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கே உள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது.



பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...