பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள ஜெய் கணபதி நகர், கிருஷ்ணவேணி ராஜநகர் மற்றும் வாசவி நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்துவிட்டது. கிருஷ்ணவேணி ராஜநகர், ஜெய் கணபதி நகர், வாசவி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கே உள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்துவிட்டது. கிருஷ்ணவேணி ராஜநகர், ஜெய் கணபதி நகர், வாசவி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கே உள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது.
பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.