கோவையில் நேற்று கனமழையால் உக்கடம், மற்றும் சுங்கம் பைபாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறினர்.
கோவை: கோவையில் நேற்று (மே.18) 2 மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் நீர் தேங்கியது. இந்த நிலையில் மழை ஓய்ந்த சற்று நேரத்தில் கோவை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

குறிப்பாக உக்கடம், மற்றும் உக்கடம் முதல் பாலக்காடு செல்லும் சாலை, சுங்கம் பைபாஸ் செல்லும் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. மேலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என பலரும் பேருந்திற்கு காத்திருக்கும் நிலையை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
குறிப்பாக உக்கடம், மற்றும் உக்கடம் முதல் பாலக்காடு செல்லும் சாலை, சுங்கம் பைபாஸ் செல்லும் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. மேலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என பலரும் பேருந்திற்கு காத்திருக்கும் நிலையை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.