கொடுவாய் பகுதியில் தொடர்ந்து நடக்கும் வெறிநாய் தாக்குதல்கள் - விவசாயிகள் வேதனை

திருப்பூர் கொடுவாய் பகுதியில் வெறிநாய்கள் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து வருவதால் விவசாயிகள் கடும் வேதனையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கொடுவாய் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பங்காம் பாளையம் மற்றும் சாய்ராம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருக்களில் அலையும் நாய்களுக்கு வெறிபிடித்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும் அவை வீடுகள் மற்றும் தோட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி ஊர்ப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பங்காம்பாளையம் பகுதியில் வசிக்கும் முத்துசாமி என்ற விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசு கன்றுக்குட்டியை நல்லிரவு சுமார் 1 மணி அளவில் வெறிநாய் கூட்டம் சுற்றி வளைத்து கடித்து கொன்றுள்ளது.



மேலும் கன்று குட்டியை நாய்கள் வேட்டையாடுவதை பார்த்த தாய் மாடு கட்டிவைத்த பகுதியில் சுற்றி சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த பசுவின் உரிமையாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதாகவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வெறிநாய்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காவு வாங்குவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உயிர்களை காவு வாங்குவதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...