கோவை மாவட்டம், சூலூர், கோவில்பாளையம் மற்றும் மதுக்கரை பகுதிகளில் பெண்களிடம் நடந்த வழிப்பறி சம்பவங்களில் இரண்டு குற்றவாளிகள் கைது. 18 சவரன், 5 கிராம் தங்க நகைகள் பறிமுதல்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் சூலூர், கோவில்பாளையம் மற்றும் மதுக்கரை பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. பகல் நேரங்களில் முகவரி கேட்பது போலவும், மளிகை கடையில் தனியாக இருக்கும் பெண்களிடம் பொருள்கள் வாங்குவது போலவும் செயின் பறிப்பு நடந்தன.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் மகன் சதாம் உசைன் மற்றும் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் அப்துல் ரஹீம்மைக் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெண்களுக்கான பாதுகாப்பின் தேவையை மீண்டும் உச்சமடையச் செய்துள்ளது.
இந்த குற்றங்களில் ஈடுபட்ட கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் மகன் சதாம் உசைன் மற்றும் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் அப்துல் ரஹீம்மைக் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெண்களுக்கான பாதுகாப்பின் தேவையை மீண்டும் உச்சமடையச் செய்துள்ளது.