தொடர் கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் நிமிடத்திற்கு நிமிடம் நீர்வரத்து அதிகரித்துகொண்டே செல்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து நாளைமறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. வால்பாறையில் பெய்த மழையால் கூழாங்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. வால்பாறையில் பெய்த மழையால் கூழாங்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.