உடுமலை சிறுமிகள் பாலியல் வழக்கு - சிவா தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த சிவா தங்கும் விடுதிக்கு, உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஆறு வாலிபர்கள் உட்பட மூன்று சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு 14 வயது சிறுவர்கள், ஒரு 15 வயது சிறுவன் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு சிவா தங்கும் விடுதி மேனேஜர் சாமுவேல்(60) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



அத்துடன் போலீசாரும் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் விடுதிக்கு வருகை தருகின்ற நபர்கள் குறித்து முறையாக விசாரணை செய்யாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் தங்குவதற்கு அனுமதி அளித்து சட்டவிரோத செயலுக்கு உறுதுணையாக இருந்ததாக வரப்பட்ட, காவல்துறை மற்றும் வருவாய் துறை அறிக்கையின் அடிப்படையில் தங்கும் விதியை மூடி சீல் வைக்க உடுமலை தாசில்தார் ப. சுந்தரம் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...