கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று மே.22 நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், ஒவ்வொரு மாதமும், சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்தும், அவற்றை தவிர்க்க தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடையும், சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களை பாதசாரிகள் கடந்த செல்லாதவாறும் அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் சாலையின் இருபுறமும் போதுமான அளவு மின் விளக்குகள் அமைத்தல், ஒளிரும்பட்டைகள், எச்சரிக்கை பலகை, ரவுண்டனா தானியங்கி சிக்னல்கள், உயர் கோபுர மின்விளக்குகள், சாலையின் நடுவில் வெள்ளை நிறக்கோடுகளை இடுதல் பயணிகள் நிழற்குடை அமைத்தல், பழுதடைந்த சாலைகளை விரைவாக சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் (போக்குவரத்து) ரோகித்நாதன் ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...