பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக கோவை வரும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும் என்று தென்னகரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்-கோயம்புத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டில் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் (24.05.2024 & 26.05.2024) ஈரோடு-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து ஈங்கூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்.

பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது. ரயில் எண்.18190 எர்ணாகுளம் ஜங்சன் - டாடாநகர் ஜங்சன் 28 & 30ம் தேதிகளில் வசதியான ஏதேனு ஒரு இடத்தில் 1 மணிநேரம் நிறுத்தி செல்லப்படும். ரயில் எண்.13352 ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் 28 & 30 தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...