காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணியால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை மே 27, 29, 30 தேதிகளில் பகுதியாக ரத்து.
கோவை: காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் காட்பாடியை அடுத்துள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் புதிய லூப் லைன் அமைக்கும் வகையில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே துறை நேற்று (22.5.2024) அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி ரயில் எண்.22615 திருப்பதி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 27.05.2024, 29.05.2024 & 30.05.2024 திருப்பதி - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு ரயில் இயக்கப்படாது; இது காட்பாடியில் இருந்து புறப்பட்டு, மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை வரை இயக்கப்படும்.
மேலும் (28.05.2024 & 30.05.2024) அன்று திரும்பும் கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்.22616) காட்பாடி திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; மேற்குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ரயில் எண்.22615 திருப்பதி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 27.05.2024, 29.05.2024 & 30.05.2024 திருப்பதி - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு ரயில் இயக்கப்படாது; இது காட்பாடியில் இருந்து புறப்பட்டு, மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை வரை இயக்கப்படும்.
மேலும் (28.05.2024 & 30.05.2024) அன்று திரும்பும் கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்.22616) காட்பாடி திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; மேற்குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.