திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதியாக ரத்து

காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணியால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை மே 27, 29, 30 தேதிகளில் பகுதியாக ரத்து.


கோவை: காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் காட்பாடியை அடுத்துள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் புதிய லூப் லைன் அமைக்கும் வகையில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே துறை நேற்று (22.5.2024) அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் எண்.22615 திருப்பதி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 27.05.2024, 29.05.2024 & 30.05.2024 திருப்பதி - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு ரயில் இயக்கப்படாது; இது காட்பாடியில் இருந்து புறப்பட்டு, மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை வரை இயக்கப்படும்.

மேலும் (28.05.2024 & 30.05.2024) அன்று திரும்பும் கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்.22616) காட்பாடி திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; மேற்குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...