மேட்டுப்பாளையத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி

மழைக்காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்றும் முறை, ஆபத்து காலங்களில் மக்களை மீட்கும் முறை, சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என்பதை கணித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு அண்மையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



அதன்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், துணை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஆனைமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மே.23 மழைக்காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்றும் முறை மற்றும் ஆபத்து காலங்களில் மக்களை மீட்கும் முறை, சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, போக்குவரத்தை சீர் செய்வது, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்பது உட்பட பல்வேறு ஒத்திகை பயிற்சிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...