74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலி மதுவா அல்லது டாஸ்மாக் கடையில் வாங்கியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Coimbatore: சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று முன்தினம் (மே.22) இருகூர் ,ஏ.ஜி. புதூரில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், பில்லு வலசை சேர்ந்த பிரபு (வயது 35) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல சின்னியம்பாளையம் டாஸ்மாக் கடை எண்:1840 அருகே உள்ள பெட்டி கடையில் நேற்று (மே.22) மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல குடியைச் சேர்ந்த காளிதாஸ் (48) பிரவீன் குமார் (24) ஆகியோர் கைது செய்தனர். பின்னர் 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் போலி மதுவா? டாஸ்மாக் கடையில் வாங்கியதா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.