கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 4 பேர் கைது

74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலி மதுவா அல்லது டாஸ்மாக் கடையில் வாங்கியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



Coimbatore: சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று முன்தினம் (மே.22) இருகூர் ,ஏ.ஜி. புதூரில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், பில்லு வலசை சேர்ந்த பிரபு (வயது 35) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சின்னியம்பாளையம் டாஸ்மாக் கடை எண்:1840 அருகே உள்ள பெட்டி கடையில் நேற்று (மே.22) மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல குடியைச் சேர்ந்த காளிதாஸ் (48) பிரவீன் குமார் (24) ஆகியோர் கைது செய்தனர். பின்னர் 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் போலி மதுவா? டாஸ்மாக் கடையில் வாங்கியதா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...