கோவையில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 20 பவுன் நகை திருடிய பெண் கைது

கோவையில் மயக்க மருந்து கொடுத்து 65 வயது மூதாட்டியிடம் இருந்து 20 பவுன் நகை திருடி விட்டு தப்பிய பெண்ணை போலீஸ் கைது செய்தனர். திருடிய நகையும் மீட்கப்பட்டுள்ளது.


கோவை: மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி (வயது 55) என்பவரும் வந்தார். 

அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று நாகம்மாளை அழைத்தார். அவரும் வள்ளியுடன் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றார். 

பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரம் ஆனதால் கோயில் வளாகத்தில் படுத்து தூங்கினர். அதற்கு முன்பாக நாகம்மாள் தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை வள்ளி கூறியதன் பேரில் கழட்டி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வள்ளியையும், நகை வைத்திருந்த பையையும் காணவில்லை.

பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்த வள்ளியை நேற்று மே.23 கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

அவர் ஏற்கனவே ஆனைமலை தர்மராஜா காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து அதன் உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை திருடி உள்ளார் .அதோடு சென்னை, காஞ்சிபுரத்திலும் கைவரிசை காட்டியுள்ளார். மேலும் நாகம்மாளிடம் நகை திருடும் முன் அவருக்கு பழரசத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்து வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...