இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும் என்று கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநரிடம் மனு அளித்தனர்.
கோவை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மனிடம் நேற்று மே.24 மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் அனைத்து தனியார், சுயநிதி, சிறுபான்மையின பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினா் உள்ளனா்.
மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்ற விதவைகளின் குழந்தைகள் போன்றோரும் இந்த பிரிவில் அடங்குவா். இந்த சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் சிறப்புப் பிரிவினருக்கு நேரடி சோ்க்கை நடத்தாமல், பொதுப்பிரிவில் அந்த இடங்களை வைத்துவிடுவதால் சிறப்புப் பிரிவினருக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தின் நல்ல நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மனிடம் நேற்று மே.24 மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் அனைத்து தனியார், சுயநிதி, சிறுபான்மையின பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினா் உள்ளனா்.
மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்ற விதவைகளின் குழந்தைகள் போன்றோரும் இந்த பிரிவில் அடங்குவா். இந்த சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் சிறப்புப் பிரிவினருக்கு நேரடி சோ்க்கை நடத்தாமல், பொதுப்பிரிவில் அந்த இடங்களை வைத்துவிடுவதால் சிறப்புப் பிரிவினருக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தின் நல்ல நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.