நெகமம் காவல் நிலைய எல்லையில் பறிமுதலாகிய 270 கிலோ தடையிடப்பட்ட புகையிலை பொருட்கள்; போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.
கோவை: போதைப்பொருள் இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று (25.05.2024) நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போளிகவுண்டன்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆல்வின்(30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சர்ஃபுதீன்(38), அனிஃபா மகன் இஸ்மாயில் (29), பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் இமானுவேல் (38) மற்றும் துரைப்பாண்டியன் மகன் பாலசுப்பிரமணி(47) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து ரூ. 3,00,000 மதிப்புள்ள 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் ரூ. 1,99,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன் பேரில், போளிகவுண்டன்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆல்வின்(30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சர்ஃபுதீன்(38), அனிஃபா மகன் இஸ்மாயில் (29), பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் இமானுவேல் (38) மற்றும் துரைப்பாண்டியன் மகன் பாலசுப்பிரமணி(47) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து ரூ. 3,00,000 மதிப்புள்ள 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் ரூ. 1,99,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.