கோவை கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

கோவையில் கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதரபுரம் அருகே கொங்கு நகர் உள்ளது. இங்கு கடந்த, 1972ம் ஆண்டு கோவை நகராட்சியாக இருந்தபோது, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 

பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் கட்டடங்களாகவும் காணப்படுகிறது.

மேலும், ஒப்புதல் வரைபடத்தில் உள்ள, 30 அடி மற்றும் 40 அடி ரோடும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை மீட்டு, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம், பல்வேறு தரப்பினரும் மனு அளித்திருந்தனர். 

இந்நிலையில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர் தலைமையிலான அலுவலர்கள், நேற்று மே.24 ஆக்கிரமிப்பை மீட்டனர். 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்துக்கான கேட்டை பூட்டி, 'சீல்' வைத்தனர். 

மற்றொரு பகுதியில் இருக்கும், 70 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் காலியாக இருந்த, 25 சென்ட் இடத்தை மீட்டு, அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்தனர். 

மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்படவுள்ளது. தற்போது ரூ.10 கோடி மதிப்பிலான, 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்டுள்ளோம். மீதமுள்ள இடமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...