உடுமலை அருகே அமராவதி அணையில் தடுப்பணை கட்ட கடும் எதிர்ப்பு - 200 பேர் கைது

உடுமலை அருகே அமராவதி அணையில் தடுப்பணை கட்ட கேரளா அரசுக்கு எதிர்ப்பு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டம் நடத்தி 200 பேர் கைது. துரைமுருகன் பதவி நீக்க போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை ஒன்று கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.



இதற்கிடையில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எனவே கேரளா அரசு உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதணை சுவாடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக கேரளா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர்.

விவசாயிகள் கூறியதாவது

அமராவதி அணை முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்சமயம் தமிழகத்தில் அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரளா அரசு தற்பொழுது வரை எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு 5 மாதத்திற்கு முன்பே சிலந்தை மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தகவல் தெரிந்தும் அலட்சியமாக இருந்த காரணத்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தடுப்பணை கட்டும் இடத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக என தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...