கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

மதுக்கரையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வேத்பிரகாஷ் சோன்கர் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல், மலுமிச்சம்பட்டியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், இன்று மே.28 மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுக்கரை போலீசார், மதுக்கரை மார்க்கெட் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர் (30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் பிச்சை பாண்டி(23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...