கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. தொண்டாமுத்தூர் அ.ரவி மற்றும் செ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில், 28.05.2024 இன்று 4.00 மணியளவில் கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 



மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஞா.சிவக்குமார், E.M.S.ரபிதீன், சா.தினேஷ்குமார், ச.சரண்யா, ரா.மனோஜ்குமார் அனைவரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

தலைவர் முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவை தொகுதி வாரியாக இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, நோட்டு புத்தகங்கள் வழங்குவது.

தீர்மானம் 2:

ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகங்களில் மாணவர் அணி அமைப்பாளர் / துணை அமைப்பாளர் இறுதி பட்டியல் தயாரிப்பது.

தீர்மானம் 3:

வரும் கல்வியாண்டில் கோவை வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் ”தமிழ் மாணவர் மன்றம்” அமைப்பை உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்த்து, நிர்வாகிகளை நிர்வகிக்கும் பணியினை விரைவாக துவக்கிட மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டியில், மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் பரிசு பெற்ற நான்கு நபர்களை அழைத்து செல்வது.

தீர்மானம் 5:

நடப்பாண்டிற்கான முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவிற்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை மீண்டும் ஜூலை மாதத்தில் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானம் 6:

கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 7:

மாணவர் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாநில மாணவர் அணி செயலாளர் CVMP.எழிலரசன், MLA அவர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள், மாநில இணைச் செயலாளர் S.மோகன் அவர்கள், மாநில துணைச் செயலாளர் கா.பொன்ராஜ் அவர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...