கோவை மாவட்டம் தடாகம் மற்றும் மதுக்கரை பகுதிகளில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முருகன் மற்றும் ராஜேந்திர பிரசாத் கைது. குண்டர் தடுப்பு சட்டம் கீழ் சிறையில் அடைப்பு.
கோவை: கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய பகுதியில் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த முருகன் (69) என்பவரை தடாகம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகன்(69) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.
இதேபோல, கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் 11 கிலோகிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜேந்திர பிரசாத் (64) என்பவரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான ராஜேந்திர பிரசாத் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகன்(69) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.
இதேபோல, கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் 11 கிலோகிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜேந்திர பிரசாத் (64) என்பவரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான ராஜேந்திர பிரசாத் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.