தாராபுரம் வழியாக வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் 5- பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பையுடன் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற போலீசார் சந்தேகப்படும்படி கைப்பையுடன் சுற்றித்திரிந்த நபரை சோதனை செய்ததில் கைப்பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நலமானார் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுஜித்குமார் (20) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சுஜித் குமாரின் நண்பர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்குச் சென்ற போலீசார் மதுபாலன் (எ) வடிவேல் (27) கார்த்திக் (30) மோகன்தாஸ் (37) அருண்குமார் (28) என மொத்தம் 5- பேரை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...