கோவை கோனியம்மன் தேர் அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபர் கைது.!

ராஜ வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் பகுதியில் உள்ள தேர் அருகே இறைச்சி கழிவுகளை வீசிய முகமது அயாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தேர் திடல், ராஜ வீதியில் அமைந்துள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரின் அருகே இறைச்சி கழிவுகளை வீசி சென்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காந்தி பார்க் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வரும் முகமது அயாஸ் என்பவர், அவரது கடையில் இருந்த ஆடு மற்றும் கோழி இறைச்சிகளின் கழிவுகளை, கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் (தேர்முட்டி) பகுதியில் உள்ள கோனியம்மன் தேர் அருகில் வீசிச் சென்று வருவதாக, அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 



இந்த நிலையில், தொடர்ச்சியாக, இறைச்சிக் கழிவுகளை தேர் அருகில் வீசிச் சென்றதால், உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இது குறித்துபுகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் முகமது அயாஸ் மீது 153A (சாதி, மத ,இன மொழி தொடர்பாக விரோத உணர்வுகளைத் தூண்டுதல்), 290 (தொல்லை கொடுத்தல்), 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது அயாஸை நேற்று ஜூன்.6 கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...