பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை

வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் கூட்டரங்கில், பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான மாநகராட்சிக்கு உட்பட்ட 83 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 37 நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தலைமையில் இன்று (07.06.2024) நடைபெற்றது.

தமிழகத்தில் வருகின்ற 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் புனரமைத்தல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.

மேலும், பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் பள்ளிகளின் தேவைகள் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி மேற்பார்வையாளர்கள், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...