சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி என்பவரிடம், நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க 20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கோவை: கோவை, சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி. இவா் கோவை குறிச்சி சிட்கோவில் உள்ள தனது நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று கோரி கோவைப்புதூா் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்துள்ளார்.
தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சிவராஜ் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்புசாமி இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில் கருப்புசாமி ரூ.20,000 சிவராஜிடம் நேற்று ஜூன்.7 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சிவராஜை கைது செய்தனர்.
தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சிவராஜ் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்புசாமி இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில் கருப்புசாமி ரூ.20,000 சிவராஜிடம் நேற்று ஜூன்.7 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சிவராஜை கைது செய்தனர்.