நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உண்டியலை கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு உடைக்க முயன்றவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலுக்குள், கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயன்றார். அப்போது, அலாரம் அடித்தது. ஊரின் முக்கியமானவர்களுக்கு மொபைல் போன் அலாரமும் அடித்தது. இதனால், உஷாரான பொதுமக்கள், கோவில் முன் திரண்டனர். உண்டியலை உடைக்க முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர் (27)என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஜூன்.7 காலையில் சமீர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சூலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் நடுப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (40), துரைமுருகன் (37), பழனிவேல் (51) உள்ளிட்ட ஐந்து பேர், சமீரை தாக்கியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல், சந்துருவை தேடி வருகின்றனர்.
விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர் (27)என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஜூன்.7 காலையில் சமீர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சூலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் நடுப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (40), துரைமுருகன் (37), பழனிவேல் (51) உள்ளிட்ட ஐந்து பேர், சமீரை தாக்கியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல், சந்துருவை தேடி வருகின்றனர்.