மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொள்ளாச்சி வருவாய் கோட்டம், வால்பாறை வட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.