மருதமலையில் இருந்து முதுமலை காப்பகத்திற்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

மருதமலையில் அதன் தாயுடன் சேர முடியாத குட்டி யானையை வனத்துறையினர் இன்று காலை முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் காட்டு யானை சிகிச்சைக்கு பிறகு காடு திரும்பியது.

இந்நிலையில் தாயுடன் இருந்த குட்டி யானை பிரிந்த நிலையில் தாயுடன் சேர்க்க நான்கு நாட்கள் முயற்சி செய்யப்பட்டது. முயற்சி கைகொடுக்காத நிலையில் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு குட்டி யானை இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை வழங்கப்பட்ட தாய் யானை ஆரோக்கியமாக உள்ள நிலையில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தபோது குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து மற்ற கூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தாய் யானை காட்டிற்குள் சென்றது.

இதனை அடுத்து மற்றொரு கூட்டத்துடன் இருந்த குட்டி யானையை பிரித்து வனத்துறையினர் தாயானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுவாக வனத்துறையினர் தாய் மற்றும் குட்டி யானையை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இந்த முயற்சி பலனை பலனளிக்காத நிலையில் இன்று காலை முதுமலை யானைகள் முகாமிற்கு நான்கு மாதமே ஆன குட்டி யானை மருதமலை பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே முதுமலை யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மூன்றாவது குட்டி யானையாக செய்துள்ளது மருதமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த குட்டி யானை.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...