வடவள்ளி, மருதமலை அடிவாரத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. நாய்கள் கடித்ததால் மான் இறந்தது என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
கோவை: வடவள்ளி, மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி., காலனி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இப்பகுதியில், காட்டு யானை மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், நேற்று ஜூன்.8, இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. பின் அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். அதில், நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று ஜூன்.8, இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. பின் அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். அதில், நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது தெரியவந்தது.