கோவை கொடிசியாவில் திமுக முப்பெரும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி ஜூன் 10 அன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை கொடிசியாவில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி அடிக்கல் நாட்டி இன்று ஜூன்.10 துவக்கி வைத்தார்.



உடன் மாவட்ட செயலாளர்கள் நா. கர்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா.

15 ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணீ கட்சி தலைவர்கள் 40 எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக தலைவர் தளபதியின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், பாஜக கூட்டணி தன்னிச்சையாக செயல்படாதவாறு முடக்கி உள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. அதனால் தான் 40 க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம்.

இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் வந்துள்ளது.

திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...